தரை பாதுகாப்பு மற்றும் விமான தளம் பாதுகாப்பு பயிற்சி நிறைவு விழா
தரை பாதுகாப்பு மற்றும் விமான தளம் பாதுகாப்பு பயிற்சியினை நிறைவு செய்த பங்கலாதேஸ் நாட்டின் விமானப்படையினர் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதியன்று  வெளியாகினர், விழாவானது தியதலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

எனவே பயிற்சியானது அணிவகுப்புப்பயிற்சி, துப்பாக்கி பிரயோகப்பயிற்சி, வனப்பயிற்சி, முதலுதவிப்பயிற்சி, தலைமைத்துவப்பயிற்சி  உட்பட அடிப்படை தரை பாதுகாப்பு மற்றும் விமான தளம் பாதுகாப்பு பயிற்சியும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு பிரதம அதிதியாக தியதலாவை விமானப்படையின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" எஸ்.பி.வி.கெ. சேனாதீர  கலந்து கொண்ட அதேநேரம் சிறப்பாக பயிற்ச்சிகளை முடித்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை