பயிற்ச்சி முடித்து வெளியேறிய விமானப்படையினர்

சுமார் 208 பயிற்ச்சியாளர்கள் 17 வார பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு 148வது நிரந்தர B  பிரிவின் கீழ் கடந்த 10.06.2011ம் திகதியன்று அம்பாறை விமானப்படை முகாமில் இருந்து வெளியேறினர்.

மேலும் இப்பயிற்ச்சியானது அணி வகுப்பு,துப்பாக்கிப்பிரயோகப்பயிற்ச்சி, அளவையியல், சண்டைப்பயிற்ச்சி, மனிதாபிமானம்,விமானப்படை சட்டம் மற்றும் முதலுதவி ஆகிய பயிற்ச்சிகளையும் உள்ளடக்கி  இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இங்கு  இடம்பெற்ற அணிவகுப்பினை  "ஸ்கொட்ரன் லீடர்"  WKA விதான மற்றும் "பைலட் ஒபிஸ்ர்" ராஜகுரு ஆகியோரும் மேற்கொண்ட அதேநேரம்  இந்நிகழ்வுக்கு விமான தொழிற்பாட்டு பிரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" ககன் புலத்சிங்ஹல அவர்கள்  உட்பட அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி KH ஏகனாயக ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.