வருடாந்த முகாம் பரிசோதனை - பெராரு

பெராரு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையானது, இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் கடந்த 18.06.2011ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை பெராரு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" தீப்தி ரவிஹன்ஷ வரவேற்ற அதேநேரம்  கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன், இச்சன்மானமானது ஒரு சிரேஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரி மற்றும் 4 கனிஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகள் உட்பட மேலும் இரு படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டது.

அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதியினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ரம்பேவெவ விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்ட அதேநேரம் மருந்து மூலிகை பயிற்ச்சி செய்கையும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெராரு விமானப்படை முகாமினில் மேற்கொள்ளப்படும் 2000 தென்னங்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 தென்னங்கன்றுகளும் நடப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலும்  விமானப்படைத்தளபதி நலன்புரி வர்த்தக நிலையம் மற்றும் "குவன் தரு செவன" போன்ற நிலையங்களையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.