வன்முறை விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம்

வன்முறை விழிப்புனர்வு மற்றும் மன ஆரோக்கிய நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் கடுநாயக்க விமானப்படை முகாமினில் கடுநாயக்க மற்றும் ஏகல விமானப்படை முகாம்களில் வசிக்கும் பெண்களுக்காக ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது.

எனவே இந்நிகழ்ச்சியானது "பெண்களின் தேவை" என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு இங்கு டாக்டர் . நிரோஷ மென்டிஸ் மன நோய் தொடர்பாக உரை நிகழ்த்தினார்.

அத்தோடு  இத்திட்டமானது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்களின் கருத்துக்கு இணங்க அனைத்து முகாம்களிலும் நடாத்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் உட்பட கடுநாயக்க விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ரேனுகா குருசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.