இந்திய கூட்டுபடை தளபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலயம் வருகை.

இந்திய கூட்டுபடை  தளபதி  லெப்டினென்ட் ஜெனரல் போதாலி சங்கர் ராஜேஷ்வர் அவர்கள்  கடந்த  2019 ஏப்ரல் 08ம் திகதி  இலங்கை விமானப்படை  தலைமை காரியாலயம் வருகை தந்து இருந்தார். 06 வது   இந்திய இலங்கை   வருடாந்த பாதுகாப்பு  மாநாட்டில்  கலந்துகொள்ள 02 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்றக்கொண்டு இருந்தார் .இவர்  இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானப்படை  தலைமை காரியாலயம் வருகை தந்த லெப்டினென்ட் ஜெனரல் போதாலி சங்கர் ராஜேஷ்வர்  அவர்களை கொழும்பு  விமானப்படை  கட்டளை  அதிகாரி  எயார் கொமாண்டர் வர்ண குணவர்தன அவர்கள்  வரவேற்றார்.  இறுதியில்  விமானப்படை  தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார் .  கூட்டத்தை நினைவுகூரும் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு நினைவு சின்னம் பரிமாற்றப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.