இலங்கை விமானப்படை ரக்பி அணி வெற்றி

கடந்த 05.08.2011ம் திகதியன்று திம்பிரிகஸ்யாய பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைப்பெற்ற ரக்பி போட்டியில் இலங்கை விமானப்படை அணி 40- 18 எனும் புள்ளி வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

எனவே இங்கு முதற்சுற்றில் விமானப்படை அணியின் ராதிக ஹெட்டியாரச்சி மற்றும் சானக சந்திமால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 20 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் பொலிஸ் அணி 10 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

மேலும் இரண்டாம் சுற்றில் விமானப்படை அணி மேலும் சிறப்பாக விளையாடி 20 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் இறுதியாக விமானப்படை 40- 18 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியினை சுவிகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இந்நிகழ்வில் இலங்கை விமானப்படை தரைமார்க்க படைப்பிரிவின் இயக்குனர் "எயார் கொமடோர்" லால் பெரேரா , விமானப்படை ரக்பி கழகத்தின் தலைவர் "எயார் கொமடோர் " விஜித குணரத்ன ,விமானப்படை விளையாட்டுத்துறை கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ஹர்ஷ பெர்னான்டு , செயளாலார் " விங் கமான்டர்" தீப்தி ரவிகன்ஷா  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.