16 வது விமானப்படை தளபதி அவர்கள் விமானப்படை தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

16 வது  இலங்கை விமானப்படை  தளபதி எயார் ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து 17 வது  விமானப்படை தளபதியாக  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களிடம்  தனது பதவியை  இலங்கை விமானப்படை தலைமைக்காரியாலத்தில் வைத்து  முறைப்படி கையளிக்கும் நிகழ்வு கடந்த 2019 மே 29ம் திகதி இடம்பெற்றது.

சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை  தளபதி அவர்களுக்கு  விமானப்படை வர்ண அணிவகுப்பு படை பிரிவினரால்  அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதன்போது  விமானப்படை தளபதி அவர்களால் விமானப்படை பற்றிய நிகழ்வுகள்  நினைவுபடுத்தப்பட்டதை அடுத்து இறுதியாக புதிய தளபதிக்கு பொறுப்பை வழங்கும் முகமாக  கோழிலனை  வழங்கி வைத்தார். இதன்போது விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் தலைமை காரியாலய அதிகாரிகள்  படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.