கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக எயார் கொமாண்டர் துய்யகொந்தா அவரகள் கடந்த 2019 ஜூலை 08 ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.

இந்த அணிவகுப்பும் எயார் கொமாண்டர் சேனாரத்ன அவர்கள் தலைமை தாங்கினார்.

புதிய கட்டளை அதிகாரியான எயர் கொமாண்டர் துய்யகொந்தா அவர்கள் சீனவராய விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமை புரிந்தார். அவர் மேலும் அவர் எம்ஐ 24,பெல் 206, ஜெட் ரேஞ்சர்பெல் 212,பெல் 412 ஹெலிகாப்டர்ஆகிய விமானங்களில் கைதேர்ச்சி பெற்ற விமானி ஆவர்.

அணிவகுப்பு முடிவின் பின்பு எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.