அனுராதபுர விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

அனுராதபுர  விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக எயார் கொமாண்டர் லியனகமகே  அவரகள் கடந்த 2019 ஆகஸ்ட் 16ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் அபேயசிங்க  அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.

இந்த அணிவகுப்புக்கு விங் கமாண்டர் பெர்னாண்டோ  அவர்கள் தலைமை தாங்கினார்.

முன்னாள் கட்டளை அதிகாரி அபேயசிங்க அவர்கள் 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி அனுராதபுர கட்டளை அதிகாரியாக கடமைகளை  பொறுப்பேற்றார் அவர் விமானப்படை தலைமை காரியாலயத்தில் ரெஜிமென்ட்  படைப்பிரிவின் பதில் பணிப்பளராக பொறுப்பேற்க இருப்பதால் இந்த பொறுப்புக்களை புதிய கட்டளை அதிகாரியிடம்  பொறுப்புக்களை கையயளித்தார் .

புதிய கட்டளை அதிகாரியான எயர் கொமாண்டர் லியனகமகே  அவர்கள் ரஷிய நாட்டின் இலங்கைக்கான பாதுகாப்பு தூதுவராக கடமை புரிந்தார் . அவர் மேலும் அவர் எம்ஐ 17,பெல் 206, ஜெட் ரேஞ்சர்பெல் 212,பெல் 412 ஹெலிகாப்டர்ஆகிய விமானங்களில் கைதேர்ச்சி பெற்ற விமானி ஆவர்.

அணிவகுப்பு முடிவின் பின்பு எயார் கொமாண்டர் அபயசிங்க  அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.