இலங்கை விமானப்படை அங்கத்தவர்களுக்கு "குற்றவியல் விசாரணை" குறித்த பயிற்ச்சி பட்டறை.

நிர்வாக சட்டப்பிரிவால் இலங்கை  விமானப்படை  ஒழுக்காற்று  பணிப்பாளரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை  விமானப்படை  ஒழுக்காற்று அங்கத்தவர்களுக்கு  "குற்றவியல் விசாரணை" குறித்த பயிற்ச்சி பட்டறை கடந்த 2019 ஆகஸ்ட் 19- 21 ம் திகதி வரை  விமானப்படை தலைமைக்காரியாலத்தின் கேட்போர்கூடத்தில்   இடமபெற்றது  

இந்த வேலைத்திட்டன் மூலம்   விமானப்படை  ஒழுக்காற்று அங்கத்தவர்களுக்கு குற்ற விசாரணை , குற்றவியல் வழக்கு மற்றும் குற்றவியல் பாதுகாப்பு குறித்து கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை வளர்ப்பதே இதன்  முக்கிய நோக்கமாகும்.

பிரதி வழக்கறிஞர்  ஜெனரல்  திரு. சுதர்ஷனா டி சில்வா , வழக்கறிஞர்  திரு. நுவான் தில்ஹான் ஜெயவரவர்தன , வழக்கறிஞர் திரு.விஸ்வ விதானகமகே , குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் திரு. திரு.சனகா டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் திரு மிஹிந்து அபேசிங்க,குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் திரு .சம்பத் சேனரத்ன  ,இலங்கை போலீஸ்  பிரிவின் காவல்  ஆய்வாளர் திரு.பிரகீத் பிரேமசிரி , போலீஸ்  ஆய்வாளர்  திரு.நிரோஷன் கலுத்தரகோரலா  ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.