கட்டுகுருந்த விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.

கட்டுகுருந்த   விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 செப்டம்பர் 10ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.  

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பாலசூரிய   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சந்திமா    அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  ஸ்கொற்றன் ளீடர்  உதயகுமார அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

முன்னால் கட்டளை அதிகாரியான  குரூப் கேப்டன் பாலசூரிய அவர்கள் கடந்த 2014  மார்ச் 02 ம் திகதி கட்டுகுருந்த  விமானப்படையின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர்  விமானப்படை மத்தள படைப்பிரிவின்   கட்டளை அதிகாரியாக   கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சந்திமா  அவர்கள்  இதற்கு முன்னர்   அம்பாறை விமானப்படை தளத்தின்    கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.   

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு  இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.