விமானப்படையின் வான்வெளி நடமாட்ட வளாகம் திறப்பு விழா

விமானப்படை கடுநாயக்க முகாமினில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வான்வெளி நடமாட்ட வளாகம் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார்  மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

எனவே விழாவானது விமானப்படைத்தளபதியின் வருகையைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றியதன்  பின்னர் ஆரம்பமாகியது.

மேலும் இக்கட்டிடத்தொகுதியானது இரு மாடிக்கட்டிடத்தொகுதிகளையும் ,28 அறைகளையும் கொண்டுள்ள அதேநேரம் இவை ஒவ்வொன்ரும் 3 படுக்கையறைகள் ,குளியலறை, சாப்பாட்டறை,சமையலறை உட்பட வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளமையும் விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். மேலும் ஏகலை தொழில் பயிற்சிக் கல்லூரி முகாமின் கட்டளை அதிகாரி 'குறூப் கெப்டென்' லக்சிரி குணவர்தன, ஏகலை முகாம் சேவா வனிதா பிரிவின் தலைவி 'விங் கமான்டர்' சந்திரிக்கா கடவரகெ, பயிற்சிக் ஆணை அதிகாரி 'விங் கமான்டர்' எச்.ஆர். தேவமித்த, அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.