'' வான் வழி நடவடிக்கை '' எனும் கருப்பொருளில் இலங்கை கடற்படையுடன் இணைந்து விமானப்படையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை.

இலங்கை  விமானப்படை  பிரிவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து  கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை பயிற்ச்சி  ஒன்றை கடந்த 2019  அக்டோபர் 07 ம் திகதி  மேற்கு கேரவலபிட்டிய  கடல்பரப்பில் 25 தொடக்கம் 30மைல் தூரம்  வரை கடற்படையின் பராக்கிரமபாகு  கப்பலுடன் விமானப்படையின்  எம் ஐ  17 மீட்பு ஹெலிகொப்டர் மூலம் இருசாராரரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டனர்

இவ்வாறான பயிற்ச்சி  இடம்பெறுவது  இதுவே முதல்முறையாகும்  இந்த பயிற்சிகளை  விமானப்படை சார்பாக விங் கமாண்டர் பெர்னாண்டோ அவர்களால்  இந்த நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது .

இந்த பயிற்சியின் பொது கடலில்  ஆபத்தான நிலையில் தத்தளிப்பவர்களை கப்பல் மற்றும் ஹெலிகோப்டேர்மூலம் மீட்பு நடவடிக்கை செய்வது தொடர்பான ஒரு பயிற்சியே இதன்போது நடைபெற்றது.

இலங்கை விமானப்படை மீட்புக் குழுவினரால்  கடலில் பலத்த காற்று வீசுவதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற பல தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளவதற்கான பயிற்ச்சியும் இடம்பெற்றது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.