விமானப்படையின் "எயார் மூமன்ட்" (விமான நடமாட்ட சேவைகள்) வளாகம் திறப்பு விழா

விமானப்படை கடுநாயக முகாமினில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 'எயார் மூமன்ட்'  (விமான நடமாட்ட சேவைகள்) வளாகம் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார்  மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

எனவே விழாவானது விமானப்படைத்தளபதியின் வருகையைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படிகுத்துவிளக்கேற்றியதன்  பின்னர் ஆரம்பமாகியது. மேலும் இந்நிகழ்வில் விமானப்படை நிர்வாக இயக்குனர், கடுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரணில் குருசிங்க உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் முதலாவது பயணியாக மாண்புமிகு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் விமானசேவையை பெற்றுக்கொண்டார். மேலும் இரண்டாம் நாள் பயணியாக புகழ்சான்ற கிரிக்கெட் வர்ணனையாளர் டோனி கிரெக் அவர்களும் பயணித்தைமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.