கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் இலங்கை விமானப்படையின் இரசாயனத் உயிரியல் கதிரிய மற்றும் அணு வெடிப்பு பிரிவினர் களத்தில்.

இலங்கை விமானப்படையின் இல 49 ம்   இரசாயனத் உயிரியல் கதிரிய மற்றும் அணு வெடிப்பு   பிரிவினர்    சீனாவில் வுஹான்  மாகாணத்தில்  உள்ள  இலங்கையரை  மீட்கும் பணியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உடன் இணைந்து  புறப்பட்டனர்

இந்த அணியினர்இலங்கையில்  இருந்து  சீனாவிற்கு  சென்று  அங்குள்ளவர்களை   பாதுகாப்பான முறையில்  பாதுகாப்பு  உடைஅணிவித்து  மீண்டும்  மத்தளை  விமான நிலையத்தில்  தரையிறங்கினர்.

அங்கிருந்து அழைத்துவந்தவர்களை    அவர்களின்  பொருள்கள் உட்பட  முழுமையான  பரிசோதனைக்கு  பின்பு  அவர்களிடம் எந்த ஒரு வைரஸ் தோற்றும்  இல்லை என  உறுதிசெய்யப்பட்ட பின்பு  அவர்களை  பாதுகாப்பன  முறையில்  நாட்டுக்குள் அழைத்து வந்தன்னர் .

விமானப்படை இரசாயனத் உயிரியல் கதிரிய மற்றும் அணு வெடிப்பு பிரிவு 2016 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டது.

இதன்  முதல் கட்டளை அதிகாரியாக ஸ்கொற்றன்  லீடர் (இப்போது விங் கமாண்டர்) நிலேந்திர பெரேரா ஆவார்,  அவரின் தலைமையிலே இன்றும்  இந்த பிரிவு  செயட்பட்டு வருகிறது. இந்த பிரிவில்  விமானப்படையின் 0 6 அதிகாரிகளும்  50  படைவீரரக்ளும்  உள்ளடங்குகின்றர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.