21 வது விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டி தொடரில் இலங்கை இராணுவ படை அணியினர் வெற்றி பெற்றனர்.

மூன்று நாட்களாக இடம்பெற்று வந்து விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டி தொடரை இலங்கை இராணுவ படையினர் கைபற்றினர். இதன் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  வெற்றியை இராணுவை படையினர் வெற்றி கொண்டனர் இதன் விருது வழங்கும் வைபவம் விமானப்படை தளபதி ஏயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் தலைமையில் அனுராதபுரம் பொது மைதானத்தில் இடம் பெற்றது.

இந்த போட்டி  தொடரில் இராணுவ படையை சேர்ந்த துஷன் ராஜபக்ஷ் மற்றும்  உதேசானி நிரஞ்சனா ஆகியோர் ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர். இந்த போட்டித்தொடரானது  ஆண்கள் பிரிவுக்கு 449 கிலோ மீட்டர் தூரத்தையும் பெண்கள் பிரிவில் 110 கிலோ மீட்டர் தூரத்தையும் கொண்டதாக காணப்பட்டது .

இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ்  அவர்கள்   கலந்து கொண்டார் மேலும் விமானப்படையின் தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் சைக்கிள் ஓட்டப்போட்டி  சம்மேளன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Men's Race

Women's Race

Awards Ceremony

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.