முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் வீடுதிரும்பினர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  வெளிநாட்டில் இருந்து வருகை தந்த  203 பயணிகளை  தனிமைப்படுத்தும்  முகமாக முல்லைத்தீவு  விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மார்ச் 22 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

முல்லைத்தீவு  தனிமைப்படுத்தல் மைய்யத்தினுள் 56 ஆண்கள் 147 பெண்கள்  ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

முல்லைத்தீவு  விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அனிருத்த விஜேசிறிவர்தன  அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  கடந்த 2020 ஏப்ரல் 06  ம் திகதி  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.