இலங்கை விமானப்படையானது தனது வை 12 ரக விமானத்தை அம்புயூலன்ஸ் சேவைக்காக மாற்றியமைத்தது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி  விமானப்படை  வான் செயற்பாட்டு   பணிப்பளார் அவர்களின் வழிகாட்டலின்கீழ்  ரத்மலான இல 08  இலகுரக போக்குவரத்து படைப்பிரினால் வை 12  விமானம்  ஒன்றை   கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை  கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் சேவைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது .

அசாதாரண சுவாச நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மருத்துவ மற்றும் தாதியர்களுக்காக வழங்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ பாதுகாப்பு ஆடைகள் என்பன இந்த விமானத்தில்   அடங்கலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டவை 12 வான் வழி  ஆம்புலன்ஸ் வெற்றிகரமாக வானில் சோதனை செய்யப்பட்டது  இல 08 இலகுரக  போக்குவரத்து படை கட்டளை அதிகாரி . குரூப்  கேப்டன் அமல்  பெரேரா, அவர்களால்  இந்த விமானம்  இயக்கப்பட்டு  அவருடன்  ரத்மலான விமானப்படை வைத்திய பிரிவின் கட்டளை அதிகாரி குரூப்  கேப்டன் சுஜித் பெரேரா  இந்த பயணித்தில் இணைந்து கொண்டார்.

இந்த விமானம் தற்போது ரத்மலான  விமானப்படைத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.