இலங்கை விமானப்படையின் முதலாவது ஸ்னைப்பர் பயிற்சிநெறி அம்பாறை விமானப்படை தளத்தில்.

விமானப்படையில்  ரெஜிமென்ட் பிரிவுக்கான  பாதுகாப்பு விசேட  ஸ்னைப்பர்  பயிற்ச்சி  பாடநெறி   முதல் முதலாக அம்பாறை  விமானப்படை தளத்தில்  ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ்  அவர்களின்  அறிவுரைப்படி   விமானப்படை  தரைப்படை   செயற்பாட்டு  பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  ரொட்ரிகோ அவரக்ளின்  வழிகாட்டலின்கீழ்  இந்த பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது.

விமானப்படையினால்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இல 01 பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கி சுடும் பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு  அம்பாறை  ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலையில்  அம்பாறை  விமானப்படை கட்டளைஅதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாடோ  அவர்களின்  தலைமையில்   ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பாடநெறியில்  மேம்பட்ட அறிவு மற்றும் திறன், வரம்பு மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் இலக்கு கையகப்படுத்தல் திறன்களைக் கொண்ட தற்காப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட தாக்குதல் கொண்ட  துப்பாக்கி சுடும் வீரராக மாறுவதற்கு, அதிக தகுதி வாய்ந்த மற்றும் துப்பாக்கி ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களுக்கு இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சிநெறியில் 12 பேர் முதல்கட்டமாக  தெரிவுசெய்யபட்டுள்ளனர் . இந்த பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சியாளர்கள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் செயல்பாடுகள், விமானப்படை பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றின் கடமைகளை ஏற்க தகுதியுடையவர்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.