01 வது அதிகாரம் அல்லாத அதிகாரிகளுக்கான விமான பாதுகாப்பு பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.

01 வது அதிகாரம் அல்லாத அதிகாரிகளுக்கான  விமான பாதுகாப்பு பயிற்சி பட்டறை  கடந்த 2021 மார்ச் 23 தொடக்கம் 26  திகதி வரை  விமானப்படை அருங்காட்சியகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது   

39 அதிகாரம் அல்லாத அதிகாரிகள்  பங்குறபற்றிய  பயிற்சிபட்டறையானது  இலங்கை விமானப்படையின் கட்டளை விமான பாதுகாப்பு ஆய்வகத்தினால்  நடத்தப்படும்   12 வது பட்டறையாகும்.

இந்த  பயிற்சிநெறியில் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகள், போக்குவரத்து பௌதீகவியல் மற்றும் உளவியல் , பறவைகளினால் ஏற்படும்  ஆபத்து, விமான விபத்து விசாரணை, பொருள் காரணி, மனித காரணி, விமானம் தீயணைப்பு மற்றும் விமான போக்குவரத்து சேவைகளின் அம்சங்கள் போன்றவை தெளிவுபடுத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் கட்டளை விமான பாதுகாப்பு அதிகாரி, எயார்  கொமடோர்  டயஸ் அவர்கள் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.