சந்தகிரு சாய தூபியில் புனித புதையல் பொருட்கள் வைக்கும் நிகழ்வு.

இலங்கை வலராற்றில் ஒரு புதிய அத்தியாயமாக  வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர சந்தகிரு சாய தூபியில் சதுக்க அறையில்  புதையல்கள் மற்றும் புனித நினைவுசின்னம்களை வைக்கும் நிகழ்வு 2021 மார்ச் 28ம் திகதி  இடம்பெற்றது.

வணக்கத்துக்குரிய தேரர்கள்  மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பக்தர்களால்  வழங்கப்பட்ட மதிப்புமிக்க கலைப்பொருட்கள் மற்றும் புனித நினைவுச்சின்னங்களின் பெரிய தொகுப்பு  , தூபியின் விரிவான விவரங்களை சித்தரிக்கும் வகையில்  பொறிக்கப்பட்ட கல் கல்வெட்டுகள்  என்பவற்றுடன் , அதன் வரலாற்று பரிமாணங்களில் ஸ்தாபிக்கப்ட்டன.

இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன  ஆகியோர் பங்குபற்றினர் இதன்போது புனித நினவுசின்னம்களை   பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமால்  குணரத்ன அவர்கள்  தேரர்களிடம் வழங்கிவைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய தேரர்கள் மற்றும் அமைச்சர்கள் அமைச்சின் செயலாளர்கள் பாதுகாப்புப்பிரிவின் பிரதானிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.