இலங்கை விமானப்படையின் 06வது " குவான் மீதுதகம் '' வான் நட்பு திட்டம் சீனக்குடாவில் .

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தளங்களில் அருகாமையில் வசித்துவரும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்தும் திட்டமான " குவான் மீதுதகம்  " திட்டத்தின்கீழ்   சீனக்குடா  விமானப்படை கல்விப்பீடத்திற்கு அருகில் அமைந்துள்ள நாளந்தா  வித்தியாலயத்திற்கு  நூலக கட்டிடம்  புணராநிர்மாணம் செய்து  கடந்த 2021 மார்ச் 31ம்  திகதி   விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது .

சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன  அவர்களின் ஆலோசனைப்படி சீனக்குடா விமானப்படை பீடாதிபதி  எயர் கொமடோர் எதிரிசிங்க அவர்களின் மேற்பார்வையின்கீழ் இந்த வேலைத்திட்டம்கள் இடம்பெற்றது.

இந்த பாடசாலையில் சுமார் 350 தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர் இந்த நூலகத்தை   ஒரே நேரத்தில் 35 மாணவர்களுக்கு  பாவனை செய்யக்கூடிய அளவுக்கு உள்ளது கடந்த 02 வருடங்களாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கட்டிடம்  விமனப்படையினால் புனர்நிர்மாணம் செய்து வழங்கப்பட்டது

 இந்த நிகழ்வில் விமானப்படை  தரைவழி செயற்பட்டு பணிப்பாளரின் மனைவி  திருமதி ரோஸி லாப்ரோய்   விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பளார் அவர்களின் துணைவி திருமதி நிரோதா தென்னகோன்  மற்றும்   சீனவராய   விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.