இல. 37 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்றக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

இல. 37 கனிஷ்ட கட்டளை மற்றும் மன்ற பயிற்ச்சி நெறியின் பட்டமளிப்பு விழா கடந்த 09.12.2011ம் திகதியன்று சீனக்குடா கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

எனவே இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் இங்கு விமானப்படையைச்சேர்ந்த சுமார் 23 அதிகாரிகள், தரைப்படையைச்சேர்ந்த 04 அதிகாரிகள், கடற்படையைச்சேர்ந்த 04 அதிகாரிகள் என மொத்தம் 31 அதிகாரிகள் இங்கு பட்டம் பெற்றதுடன் இவர்களுக்கான பட்டம் களனி பல்கலைகழகத்தினால் வெளிவாரிப்பட்டம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இங்கு பங்குபற்றிய அதிகாரிகளுக்கு சுமார் 14 வார முழுநேர பயிற்ச்சி நெறி வழங்கப்பட்ட அதேநேரம்  இவர்களுக்கு பேச்சுப்பயிற்ச்சி, உடற்பயிற்ச்சி, கல்விச்சுற்றுலா என்பனவும்  வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு விஷேட பரிசில்களை பெற்றுக்கொண்டோரின் பெயர் விபரங்கள் வருமாரு.

சகல துறை சிறந்த செயற்பாட்டாளர்
"ஸ்கொட்ரன் லீடர் " PNJ தி சில்வா

சிறந்த புத்தக வாசிப்பாளர்
"பிலைட் லெப்டினன்" MGH தி சில்வா

சிறந்த விளையாட்டு வீரர்
"ஸ்கொட்ரன் லீடர்" WJC தேவந்தர

சிறந்த முகாமைத்துவ திறன்
"மேஜர்" MRMRLB மீகச்தென்ன

சிறந்த பொதுப்பேச்சாளர்
"பிலைட் லெப்டினன்" KK ஹேவானாயக

சிறந்த பத்திரிகை திறன்
"ஸ்கொட்ரன் லீடர்" D லியனகே

சிறந்த வகுப்பறையாளர்
"ஸ்கொட்ரன் லீடர்" PNJ தி சில்வா




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.