வான் சாரணர் குழுவினரின் வருடாந்த பயிற்சி முகாம்

வான் சாரணர் இயக்கத்தினரின் 3வது வருட பயிற்சி முகாம் அண்மையில் தியத்தலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

அத்துடன் இலங்கை விமானப்படையின் முக்கிய பயிற்சி முகாமான தியதலாவையில் பயிற்சினை மேற்கொண்டதுடன் அதில் அணிவகுப்புப்பயிற்சி, தலைமைத்துவப்பயிற்சி உட்பட அடிப்படை கணணிப்பயிற்சியும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் அணிவகுப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைப்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய கெடெட் அணியின் இயக்குனர் 'மேஜர் ஜென்ரல்' ஜயசுந்தர கலந்து கொண்ட அதேநேரம் அணிவகுப்பு மாரியாதையுடன் பயிற்சியை சிறப்பாக முடித்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தியத்தலாவை விமானப்படை முகாம் கல்விக்கழகத்தின் ஆனையாளர், சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும். மேலும் இறுதியாக அணி வகுப்பு மாரியாதையுடன் பயிற்ச்சியை சிறப்பாக முடித்தவர்களுக்கு பரிசில்களும்  வழங்கப்பட்டன.






  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.