வவுனியா விமானப்படை தளத்தின் 44 வது வருட நிறைவுதினம்

வவுனியா விமானப்படை தளத்தின் 44 வது  வருட நிறைவுதினம்  கடந்த 2022 அக்டோபர் 27ம்  திகதி  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குணதிலக  அவர்களின்  வழிகாட்டலின்கீழ்   அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோரின் பங்களிப்பில்  மத வழிபாடுநிகழ்வுகள்  மற்றும்  சமுகசேவை திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன  

இந்த தினத்தை முன்னிட்டு மடுகந்த தலதா விகாரை மற்றும் புனித ஜோசப் தேவாலயம் வவுனியா ஸ்ரீ போதிராஜாராமய ஆலயம், முன்னிமுறிப்பு இந்து கோவில்,வவுனியா முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு  சிரமதான பணிகள் இடம்பெற்றன மேலும் மரம்நடும் செயற்பாடும் இடம்பெற்றது.

மேலும்  படைத்தள மைதானத்தில் அனைவரின்பங்கேற்பில்  மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து அனைவரின் பங்களிப்பில் இரவு நேர உணவும் வழங்கப்பட்டது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.