இலங்கை விமானப்படையின் 46வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் பாலவியில் இடம்பெற்றது

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் பாலவி  விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 46வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்  அட்டவில்லுவ மேதானந்தா ஆரம்பப் பாடசாலையில்  கடந்த நவம்பர்30ம் திகதி    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

பள்ளிக் கட்டிடம், வகுப்பறைகள், அதிபர் அலுவலகம் மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவை புனரமைக்கப்பட்டு மேதானந்தா ஆரம்பப் பாடசாலை  மாணவர்களிடம் பாலவி விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி , குரூப் கேப்டன் கோலித வீரசேகர அவர்களினால் பாடசாலை அங்கத்தவர்க்ளுக்கு  கையளிக்கப்பட்டது.     மட்டக்களப்பு   விமானப்படைத்தளத்தின்  பதில் கட்டளை அதிகாரி சந்தன முனசிங்க   அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் பாலவி     விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது   இந்த நிகழ்வில் பாலவி    விமானப்படை தளத்தின்   அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.