புதிய இலங்கை கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

புதிதாக பதவியேற்ற இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா  அவர்கள் இலங்கை   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 2022 டிசம்பர் 28ம் திகதி விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார்

வருகை தந்த புதிய கடற்படை தளபதியினை  கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் சுரேஷ் பெர்ணாண்டோ அவர்களின் தலைமையில் இல 43 வர்ண அணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இலங்கை விமானப்படை தளபதியுடனான  உத்தியோக சந்திப்பு  இடம்பெற்றது இதன்போது  தனது வாழ்த்துக்களை விமானப்பப்படை தளபதி தெரிவித்தார்  மேலும்  ஒன்றிணைந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் கூட்டுப்பயிற்சிகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.