விமானப்படையின் 2023 புதுவருட வேலைகள் ஆரம்பம்

இலங்கை விமானப்படையினரின்  புதியவருடத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கான தொடக்க நிகழ்வு கொழும்பு  விமானப்படை  தலைமைக்காரியாலத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கடந்த 2023 ஜனவரி 02 ம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது

இந்தநிகழ்வுகள்  அனைத்தும் அனைத்து விமானப்படை தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. தேசியக் கொடி எதரப்பட்டதோடு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது இந்த நிக்லாவில் பணிப்பளர்கள்  அதிகாரிகள், சிவில் ஊழியர்கள்ன்பங்கேற்றனர்

இதன்போது விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு தளபதி உரையை ஆரம்பித்தார்.கடந்த ஆண்டில் எழுந்த சவாலான சூழ்நிலைகளை சகித்துக்கொள்வதில் விமானப்படையின் மகத்தான பங்கை தளபதி அவர்கள் எடுத்துரைத்தார்,

மேலும், அரசியலமைப்பை நிலைநாட்டுவதன் மூலம் இந்த நாட்டின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே மிக முக்கியமான கடமை என்பதை மனதில் கொண்டு, அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சிந்தனையையும்  புத்தி கூர்மையையும் பயன்படுத்தி பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனபோது , விமானப்படை சேவையாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட "ஈகிள்ஸ்' மெகா டிரா" தொடக்க விழாவை அவர் நினைவுபடுத்தி . பின்னர், விமானப்படைத் தளபதி பெறுமதியான  பரிசான ரூ. 2.5 மில்லியன் முன்னணி விமானப்படை வீரர் சேபாலவுக்கு, இரண்டாம் பரிசாக ரூ.  1 மில்லியன்  சார்ஜென்ட் குமாரவுக்கு மற்றும் மூன்றாம் பரிசாக ஐந்து  லட்சம்  பிளைட் சார்ஜென்ட் புஷ்பகுமாரவுக்கும் வழங்கிவைக்கப்பட்டது

அனைத்து மத அனுசரிப்புகளும் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது, விமானப்படை மற்றும் அதன் உறுப்பினர்களை ஆசீர்வதிப்பதற்க்காக .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.