இலங்கை விமானப்படையின் 72 வது வருட நிறைவை முன்னிட்டு வருடாந்த மல்லிகை மலர் பூஜை நிகழ்வு

வானின் பாதுகாவலர்கள் எனும்  தொனிப்பொருளின்கீழ் சேவையாற்றிவரும் இலங்கை விமானப்படையின் 72வது  வருட நிறைவுதினத்தை கடந்த 2023 பெப்ரவரி 28 ம் திகதி தொடர்ந்தும் 06 வது முறையாக களனி ரஜமஹா விகாரையில் மல்லிகை மலர் பூஜைவழிபாடுகள்   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் பங்கேற்பில்  கொழும்பு  விமானப்படை தளத்தினால் ஏற்பாடுகள்  செய்யப்பட்டது .

இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பக சபை உறுப்பினர்கள், அவர்களது மனைவிமார்கள், விமனப்படைத்தளங்களின்  கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், விமானப்படை தலைமையகம் மற்றும் ஏனைய விமானப்படை தளங்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.