விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றது

24வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளின்  இறுதி கட்டம் 2023 மார்ச் 04, ம் திகதி  வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்தில் நிறைவடைந்தது இந்தப் போட்டியானது பொலன்னறுவையிலிருந்து அனுராதபுரம் வரையிலான 132 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியது.

மூன்றாவது கட்டத்தில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பசிந்து திசர முதலாம் இடத்தையும், இலங்கை கடற்படையின் பிரபாஷ் மதுஷங்க மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் நிபுன் சோனல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்று  இறுதி கட்டத்தை முடித்தனர்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பமான பெண்களுக்கான பந்தயம் ஹபரணையிலிருந்து அனுராதபுரம் வரையிலான 84.9 கிலோமீற்றர் தூரத்தையும் கடந்ததுடன், இலங்கை விமானப்படையின் சைக்கிள் வீராங்கனை தினேஷா தில்ருக்ஷி முதலிடத்தையும் சுதாரிகா பிரியதர்ஷன்னி இரண்டாமிடத்தையும், இலங்கை கடற்படையின் ஆன் ஷெனாலி பெரேரா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

பரிசளிப்பு விழா அனுராதபுரம் விமானப்படை தள வளாகத்தில் பிரதம அதிதியாக எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தலைமையில் நடைபெறவுள்ளது.

Men’s race

Women’s race

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.