இலங்கை விமானப்படையின் 53வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் கட்டுகுருந்தாவில் இடம்பெற்றது

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டல்

 மற்றும் பங்கேற்பில் கட்டுகுருந்த  விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 46வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்  தெபுவன  ஆரம்பப் பாடசாலையில்  கடந்த 2023 மார்ச் 27ம்  திகதி    வெற்றிகரமாக நிறைவு பெற்று கையளிக்கப்பட்டது

பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்த ஆரம்பப் பள்ளிக் கட்டிடம், பள்ளியில் பயிலும் சுமார் 157 மாணவர்களுக்கு இனிமையான கல்விச் சூழலை உருவாக்கும் வகையில் முழுமையாகச் சீரமைக்கப்பட்டது. கட்டிடம் சீரமைக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, விழாவில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதி விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கட்டுகுருந்தா     விமானப்படையினால்  வழங்கிவைக்கப்பட்டது   இந்த நிகழ்வில் கட்டுகுருந்த   விமானப்படை தளத்தின்   கட்டளை அதிகாரி குருப் கேப்டன்அசித்த ஹெட்டியாராச்சி ,மற்றும்  அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                       

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.