இந்திய விமானப்படை தளபதி இலங்கையில் உள்ள இந்திய அமைதிகாக்கும் படைப்பிரிவினரின் நினைவாக நிர்மாணிக்கபட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.

இலங்கைவிஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த  2023 மே 03ம் திகதி  இலங்கையில் பணியாற்றி உயிர்நீத்த  இந்திய அமைதிகாக்கும் படைப்பிரிவினரின் நினைவாக நிர்மாணிக்கபட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் விமானப்படை பொது நலன்புரி பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ,  பயிற்சி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்து  எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.