2023 ம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படையின் வெசாக் பக்தி கீதம் , மற்றும் அன்னதான நிகழ்வுகள்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கொழும்பு  விமானப்படை தளம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2023 ம் ஆண்டுக்கான   இலங்கை விமானப்படையின் வெசாக்  பக்தி கீதம் , மற்றும் அன்னதான நிகழ்வுகள்  கொழும்பு  ரைபிள் கிறீன் மைதானத்தில் கடந்த 2023 மே 06  திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன கலந்துகொண்டனர்.

விமானப்படையின் வெசாக் பகுதியின்  விளக்குகளை பிரதம அதிதி ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது மற்றும் விமானப்படை தளபதி மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் மைதானத்தில் ஆக்கப்பூர்வமான விமானப்படை வெசாக் விளக்கு காட்சியை பார்வையிட்டனர்.

விமானப்படை  வெசாக் பக்திகீதம் நிகழ்வில் 12 பாடல் மற்றும் 01 நாடகம் என்பன இடம்பெற்றது

இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும்  விமானப்படை தளங்களின்  கட்டளை அதிகாரிகள் உற்பட அதிகாரிகள் படைவீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.