2023 ம் ஆண்டுக்கான விமானப்படையின் இந்து சமய வழிபாடுகள்

2023 ம் ஆண்டுக்கான  விமானப்படையின் இந்து சமய வழிபாடுகள்
விமானப்படையில் பணியாற்றிய போது உயிரிழந்தவீரர்களை  நினைவு கூறும்  இந்து சமய நிகழ்வு கடந்த  2023 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பு 10 கப்டன் தோட்டத்திலுள்ள ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலயத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விமானப்படையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்து சமய வழிபாடுகள் இறுதி யுத்தத்தின் போது தாய்நாட்டிற்காக உயிர்  தியாகம் செய்த விமானப்படை வீரர்கள்  மற்றும் சேவையின் போது இறந்த விமானப்படை உறுப்பினர்கள் மற்றும் தற்போது  கடமையாற்றிவரும்   விமானப்படை அங்கத்தார்கள்  மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை தளங்களுக்கான ஆசீர்வாதம் பெறுபவதற்காக இடம்பெறுகிறது.

இந்த நிகழ்வில்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ மற்றும் விமானப்படை தலைமை தளபதி  மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.