விமானப்படை இடைநிலை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2023

விமானப்படை தளங்களுக்கிடையேயான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2023 செப்டெம்பர் 04 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெற்றது  மற்றும் பரிசளிப்பு விழா கட்டுநாயக்க விமானப்படை தள உள்ளக விளையாட்டரங்கில் பொதுநிர்வாக பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் கேஎம்கே கப்பெட்டிபொல தலைமையில் நடைபெற்றது.

இலங்கை விமானப்படை தளம் வவுனியா ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை சுவீகரித்ததுடன், கொழும்பு விமானப்படை தளம் பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை வென்றது. ஆடவர் பிரிவில் இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா மற்றும் இலங்கை விமானப்படை சினேவராய அகாடமி இணைந்து இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது.

இந்த நிகழ்வில்  விளையாட்டுப் பணிப்பாளர் குரூப் கப்டன் டபிள்யூ.ஏ.எஸ்.பி.வீரசேகர, விமானப்படையின் டேக்வாண்டோ தலைவர் எயார் கொமடோர் வி.டி.எஸ்.சிறிமான்ன, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.