ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் படிப்பின் உறுப்பினர்கள் விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தருகின்றனர்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியின் பிரதிநிதிகள் குழு ஒன்று 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தது. கர்னல் லாரா டெரஸ் ட்ராய் தலைமையிலான 28 பேர் கொண்ட தூதுக்குழுவினர் விமானப்படைத் தளபதியின் சார்பாக தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்னவுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர். இச்சந்திப்பின் போது, ​​பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், சந்தர்ப்பத்தை நினைவு கூறும் வகையில் உத்தியோகபூர்வ நினைவுச்சின்னம்  ஒன்றும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜோன்ஸ்டன் அவர்களும் இக்குழுவினருடன் கலந்துகொண்டார்.

இலங்கை விமானப்படையின் திட்டமிடல் இயக்குநரகத்தின் கோட்பாடு மற்றும் கொள்கை அபிவிருத்திப் பணிப்பாளர் எயார் கொமடோர் பிரியமல் பெர்னாண்டோ 'இலங்கை விமானப்படையின் பங்கு மற்றும் செயல்பாடு' என்ற தலைப்பில் விளக்கமளித்தார். ஊடாடும் கேள்வி பதில் அமர்வில் விமானப்படை இயக்குனரக உறுப்பினர்கள் மற்றும் மூத்த பணியாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.