அமெரிக்க தேசிய தினக் கொண்டாட்டங்களில் விமானப்படை இசைக்குழு இணைந்தது

அமெரிக்காவின் 250வது தேசிய தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தால் 30 ஜூன் 2026 அன்று ஹவ்லொக் சிட்டி வளாகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு இராணுவ இசைக்குழு நிகழ்ச்சியில் இலங்கை விமானப்படை இசைக்குழு பங்கேற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில், அமெரிக்க கடற்படையின் III கடற்படைப் பயணப் படையின்   ஐவர்  அடங்கிய இசைக்குழுவும், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் இசைக்குழுக்களும் இடம்பெற்றன. பொதுமக்கள் இலவசமாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட விமானப்படை அதிகாரியும், நிகழ்த்துக்கலைகளின் இயக்குநருமான எயார் கொமடோர் சஞ்சய விதான பங்கேற்றார். விமானப்படை இசைக்குழுவை, நிகழ்த்துக்கலைகளின் கட்டளை அதிகாரியான ஸ்குவாட்ரன் லீடர்  கயான் ஜோசப் வழிநடத்தினார்.

ஏறக்குறைய ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற முதல் மக்கள் இராணுவ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி என்ற வகையில், இந்த நிகழ்வு ஒரு சிறப்பு மைல்கல்லாகவும் அமைந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.