கடுநாயக்க விமானப்படை முகாமின் இப்தார் நிகழ்வு.

 புனித ரமழான் மாத நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) நிகழ்வொன்று அண்மையில் இலங்கை  விமானப்படை கடுநாயக்க முகாமினில் அதன் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" எஸ்.கே. பதிரன அவர்களின் தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வு மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தினை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்டதுடன் ,அங்கு வருகை தந்த மொளலவி அவர்கள்  மூலம் இலங்கை விமானப்படையின் அனைத்து அங்கத்தவர்களுக்காகவும் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர்நீத்த வீரர்களுக்காகவும், நமது தாய் நாட்டிற்காகவும் வேண்டி இறைவனிடம்  பிராத்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் ஏனைய கட்டளை அதிகாரிகள் உட்பட ,விமானப்படை முஸ்லிம் உருப்பினர்களும் கலந்துகொண்டமையும் விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.